search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்நடை வளர்ப்பு"

    • மாடுகளால் உயிர் இழப்பு ஏற்பட்டால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
    • நகர்ப்புறங்களில் மாடுகளை வளர்க்க விரும்புபவர்கள் சென்னைக்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும்.

    சென்னை:

    உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சியுடன் அலெர்ட் அறக்கட்டளை இணைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உயிர் காக்கும் தானியங்கி வெளிப்புற 'டிபிபிரி லேட்டர்' கருவியின் செயல்பாட்டை ரிப்பன் கட்டிட வளாகத்தில் மேயர் ஆர்.பிரியா தொடங்கி வைத்தார்.

    இதில் பங்கேற்ற கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அடிப்படை உயிர்காக்கும் பயிற்சி அவசியமானது. மாநகராட்சியில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் இந்த பயிற்சி வழங்கப்படும். மக்கள் கூடும் பொது இடங்களில் இக்கருவி அமைக்கப்படும். மேலும் இது தொடர்பான அறிவிப்பு பலகையும் மக்களுக்கு தெரிவிக்கப்படும். சுகாதாரத்தை மக்கள் தேடி செல்ல வேண்டும்.

    வேதனையான சம்பவம் சாலையில் சுற்றித் திரிந்த மாடு முட்டி ஒருவர் குடல் கிழிந்து சிகிச்சை பெற்று வருகிறார். சென்னையில் மயிலாப்பூர், திருவான்மியூர், அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., நங்கநல்லூர், பகுதிகளில் மாடுகள் சுற்றித்திரிகின்றன.

    நகர்ப்புறங்களில் மாடுகளை வளர்க்க விரும்புபவர்கள் வீட்டுக்குள்ளேயே வளர்க்க வேண்டும். சாலையில் சுற்றித் திரிந்தால் உரிமையாளர்களிடம் இனிமேல் திருப்பி ஒப்படைக்கமாட்டோம்.

    மாடுகளால் உயிர் இழப்பு ஏற்பட்டால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். நகர்ப்புறங்களில் மாடுகளை வளர்க்க விரும்புபவர்கள் சென்னைக்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும். இனிமேல் பிடிக்கப்படுகிற மாடுகளை பேணி காக்க கால்நடை வளர்ப்பு மையங்களுக்கு கொண்டு செல்லப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கால்நடை வளர்ப்பை மேம்படுத்த கிராமங்களை தத்தெடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா? என்று தர்மர் எம்.பி. கேள்வி எழுப்பினார்.
    • பாராளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றார்.

    பரமக்குடி

    பாராளுமன்ற கூட்டத் தொடரில் நாட்டில் கால் நடை வளர்ப்பை மேம்படுத்த கிராமங்களை தத்தெடுக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதா? அப்படியானால் அதன் விவரங்கள் மற்றும் அதற்காக நிர்ணயிக்கப்பட்ட நிதியின் விபரங்கள் மற்றும் தமிழ்நாட்டில் கண்டறியப் பட்ட கிராமங்களின் விப ரங்கள், அந்த திட்டம் செயல் படுத்துவதற்கான காலக் கெடு ஆகியவை குறித்து தர்மர் எம்.பி. கேள்வி எழுப்பினார்.

    அதற்கு மத்திய இணை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:-

    கால்நடை வளர்ப்பு மற்றும் பால் வளத்தை மேம்படுத்து வதற்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பால் பதப்படுத்துதல் மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்கான திட்டம் பால் கூட்டுறவு மற்றும் உழவர் உற்பத்தி யாளர் அமைப்பு களுக்கு பால் நடவடிக்கை களில் ஈடுபடுதல், தேசிய கால்நடை மிஷின், கால்நடை வளர்ப்பு, உள் கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, கால்நடைகள் உடல் நலம் மற்றும் நோய் கட்டுப் பாடு திட்டம், கால்நடை கணக்கெடுப்பு மற்றும் ஒருங்கிணைந்த மாதிரி ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத் தில் தமிழகத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து தர்மர் எம்.பி. கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய மந்திரி கவுசல் கிஷோர் பதில ளிக்கையில், 100 ஸ்மார்ட் நகரங்களுக்கு ஒரு நகரத்திற்கு ஆண்டிற்கு சராசரியாக ரூ.100 கோடி என்ற அடிப்படையில் சமமான நிதியை மாநில அரசு, மற்றும் நகர் புற உள்ளாட்சி அமைப்புக்கு வழங்கும்.

    100 ஸ்மார்ட் நகரங்களில் 7,978 திட்டங்களை செயல் படுத்த திட்டமிடப் பட்டுள்ளது. அதில் 5,909 திட்டங்கள் முடிக்கப் பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர் ஆகிய நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்வு செய்யப் பட்டுள்ளன என்றார்.இது குறித்து பரமக்கு டியில் நிருபர்களிடம் தர்மர் எம்.பி. கூறுகையில், மத்திய அரசின் மூலம் செயல் படுத்தப்படும் திட்டங்களை மாநில அரசு முறையாக செயல்படுத்தி னாலே நன்றாக இருக்கும். தமிழக மக்களுக்காகவும், மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்ப டுத்தவும் பாராளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றார்.

    • மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த ஆலங்காடு ஊராட்சியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • மாவட்ட கலெக்டர் மற்றும் சீர்காழி சட்டபேரவை உறுப்பினர் முகாமை துவக்கி வைத்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த ஆலங்காடு ஊராட்சியில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி மற்றும் சீர்காழி சட்டபேரவை உறுப்பினர் எம். பன்னீர்செல்வம் முகாமை துவக்கி வைத்தனர்.

    தொடர்ந்து கால்நடை களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் அங்கு அமைக்கப்பட்டிருந்த கால்நடை அபிவிருத்தி சிறப்பு அரங்குகளை பார்வையிட்டு கேட்டறிந்தனர்.

    மேலும் கால்நடை வளர்ப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆலோசனைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக சீர்காழி சட்டபேரவை உறுப்பினர் எம். பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    விழாவில் கால்நடை வளர்ச்சி துறை கூடுதல் இயக்குனர் சுமதி, ஆவின் பொது மேலாளர் மருத்துவர் ராஜசேகர், சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார், கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக அதிகாரிகள் குழுவினர் மற்றும் கொள்ளிடம் ஒன்றிய பெருந்தலைவர் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த கால்நடை வளர்க்கும் பொதுமக்கள் தங்கள் கால்நடைகளுடன் வந்து மருத்துவ சிகிச்சை பலன் பெற்றனர்.

    • செக்கானூரணி அருகே புலிகுத்தி பட்டான் கல் கண்டெடுக்கப்பட்டது.
    • கால்நடை வளர்ப்புக்கென்று தனியாக ஒரு குழு அமைத்து பாதுகாத்து வந்தனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் செக்கா னூரணி அருகிலுள்ள எஸ்.பெருமாள்பட்டியில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தை சேர்ந்த மதுரை அருண்சந்திரன் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலை ஓரத்தில் ஒரு வித்தியாசமான சிற்பம் இருப்பதை பார்த்து அது புலிகுத்தி பட்டான் கல் என்பதை கண்டறிந்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-

    ஆரம்ப காலங்களில் நம் மக்களின் பிரதான தொழில் விவசாயமும், கால்நடை வளர்ப்பும் தான்.

    கால்நடை களுக்கு பொதுவாக ஆபத்தை விளைவிக்கும் பாம்புகளும் , கால்நடைகளை வேட்டையாடி உணவாக உட்கொள்ளும் புலிகளும் மற்றும் நரிகளும்,மாமிச பட்சினிகளும் அதிகமாக மலை பகுதிகளில் காண ப்படும்.

    இவைகளிடமிருந்து கால்நடைகளை காக்கும் பொருட்டு வீரர்கள் போராடி உள்ளனர். இவ்விதமான போராட்டத்தின் போது வீரர்களோ அல்லது புலியோ இறப்பது உண்டு. இங்கு காணப்படும் சிற்பம் 4 அடி உயரமும், 2 1/2 அடி அகலத்துடன் பலகை கல்லில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தில் வீரன் ஒருவன் புலியை ஈட்டியால் குத்துவது போல் வடிக்கப்பட்டுள்ளது. அருகில் காணப்படும் பெண் அவ்வீரனின் மனைவியாக இருக்கலாம். வீரனின் காலடியில் வேட்டை நாய் காணப்படுகின்றது. பாண்டிய நாட்டில் மட்டுமே புலிகுத்தி கல்லில் வேட்டை நாயின் உருவமும் சேர்த்து வடிப்பது வழக்கமாக உள்ளது. மற்ற பகுதிகளில் காணப்படும் புலிக்குத்தி கல்லில் இவ்விதம் வேட்டை நாய் காணபடுவது மிகவும் அபூர்வமாகும். இந்த கல் மிக சேதமடைந்து காணப்ப டுகிறது. இது போன்ற வரலாற்று சின்னங்களை பாதுகாப்பது நம் ஒவ்வொரு வரின் கடமையாகும் இவ்வாறு அவர் கூறினார்.

    • செக்கானூரணி அருகே புலிகுத்தி பட்டான் கல் கண்டெடுக்கப்பட்டது.
    • கால்நடை வளர்ப்புக்கென்று தனியாக ஒரு குழு அமைத்து பாதுகாத்து வந்தனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் செக்கா னூரணி அருகிலுள்ள எஸ்.பெருமாள்பட்டியில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தை சேர்ந்த மதுரை அருண்சந்திரன் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலை ஓரத்தில் ஒரு வித்தியாசமான சிற்பம் இருப்பதை பார்த்து அது புலிகுத்தி பட்டான் கல் என்பதை கண்டறிந்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-

    ஆரம்ப காலங்களில் நம் மக்களின் பிரதான தொழில் விவசாயமும், கால்நடை வளர்ப்பும் தான்.

    கால்நடை களுக்கு பொதுவாக ஆபத்தை விளைவிக்கும் பாம்புகளும் , கால்நடைகளை வேட்டையாடி உணவாக உட்கொள்ளும் புலிகளும் மற்றும் நரிகளும்,மாமிச பட்சினிகளும் அதிகமாக மலை பகுதிகளில் காண ப்படும்.

    இவைகளிடமிருந்து கால்நடைகளை காக்கும் பொருட்டு வீரர்கள் போராடி உள்ளனர். இவ்விதமான போராட்டத்தின் போது வீரர்களோ அல்லது புலியோ இறப்பது உண்டு. இங்கு காணப்படும் சிற்பம் 4 அடி உயரமும், 2 1/2 அடி அகலத்துடன் பலகை கல்லில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தில் வீரன் ஒருவன் புலியை ஈட்டியால் குத்துவது போல் வடிக்கப்பட்டுள்ளது. அருகில் காணப்படும் பெண் அவ்வீரனின் மனைவியாக இருக்கலாம். வீரனின் காலடியில் வேட்டை நாய் காணப்படுகின்றது. பாண்டிய நாட்டில் மட்டுமே புலிகுத்தி கல்லில் வேட்டை நாயின் உருவமும் சேர்த்து வடிப்பது வழக்கமாக உள்ளது. மற்ற பகுதிகளில் காணப்படும் புலிக்குத்தி கல்லில் இவ்விதம் வேட்டை நாய் காணபடுவது மிகவும் அபூர்வமாகும். இந்த கல் மிக சேதமடைந்து காணப்ப டுகிறது. இது போன்ற வரலாற்று சின்னங்களை பாதுகாப்பது நம் ஒவ்வொரு வரின் கடமையாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×